என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாபர் ஆசம்"
- பந்து வீச்சு பலம், பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம்.
- ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் சிறப்பாக விளையாட முடியாது.
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
இந்த டி20 உலகக் கோப்பையில் உள்ள அனைத்து அணிகளையும்விட, பாகிஸ்தானிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள். ஆஸ்திரேலியாவைப் பார்த்தால், அவர்களிடம் 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒரே ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே உள்ளனர். இங்கிலாந்தைப் பொறுத்தவரை, மார்க் வுட் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும்.
ஆனால். பாகிஸ்தானுக்காக, ஷாஹின் அப்ரிடி, ஹரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் 140 கிமீக்கு மேல் பந்து வீசுவார்கள். வேகப்பந்து வீச்சுதான் அவர்களின் பலம். இருப்பினும், அவர்களின் பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம். அவர்களிடம் தரமான பவர்-ஹிட்டர் இல்லை, மேலும் அவர்கள்(பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்) ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் விளையாட முடியாது.
பாபர் சீக்கிரம் அவுட்டானால், இந்தியா தனது மிடில் ஆர்டர் வேகப்பந்து வீச்சை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை, எனவே பவுண்டரி அடிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்காது. இதுவே பாகிஸ்தானுக்கு பலவீனங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியில் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த 3-வது வீரர் இடத்தை பாபர் ஆசம் கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக முதல் 5 சதங்கள் அடித்தவர் பட்டியலில் இவர் 2-வது இடத்தை பிடித்தார். மேலும் 20 ஓவர் போட்டியிலும் வேகமாக 1000 ரன்னை அவர் எட்டினார்.
பாபர் ஆசம் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் அணி சரியாக ஆடாவிட்டாலும் அவர் மட்டும் திறமையை வெளிப்படுத்தினார். ஒருநாள் போட்டியில் 226 ரன்களும், டெஸ்டில் 216 ரன்களும் எடுத்தார்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறும்போது, “பாபர் ஆசம் சிறந்த ஆட்டக்காரர். உலகில் மிக சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம் பெறுவார். தற்போது அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் ஆசமை விராட் கோலியுடன் ஒப்பிட்டது சரிதான்” என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து பலரும் சமூக வலைதளத்தில் விராட் கோலியுடன், பாபர் ஆசமை ஒப்பிட்டு கருத்துக்களை அதிகளவில் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் விராட் கோலியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று பாபர் ஆசம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
விராட் கோலி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்டில் பல முக்கிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். ஆனால் நான் தற்போதுதான் என்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறேன். நான் சாதிக்க வேண்டியது நிறையவே உள்ளது. இதனால் என்னை யாரும் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.
இவ்வாறு பாபர் ஆசம் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்